சிறையில் இருந்து வந்தவர் பழிக்குப் பழியாக கழுத்தறுத்து கொலை.. மதுரையில் பயங்கரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிறையில் இருந்து வந்தவர் பழிக்குப் பழியாக கழுத்தறுத்து கொலை.. மதுரையில் பயங்கரம்

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் சிறையில் இருந்து வெளியே வந்த நபரை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கீழத்தெரு பகுதியில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த டவர் சரவணன் என்பவர் நேற்று நள்ளிரவு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். ஆங்ணடிப்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியில் வந்துள்ளார். அவரை மர்மநபர்கள் சிலல் நேற்று நள்ளிரவு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். தகவலறிந்து வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை