டிடிவி தினகரனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிடிவி தினகரனுக்கு ஜாமின் தர டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் டிடிவி தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கும் 5 நாட்கள் காவல் அளிக்கப்பட்டு உள்ளது. இருவரையும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸ் அனுமதி கேட்டத்தை அடுத்து காவல் அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.