குப்பை கொட்டும் பணி இடைநிறுத்தம்
கிரிந்திவெல, மாளிகாவத்தை பிரதேசத்திலுள்ள தொம்பே குப்பைமேட்டில் கொழும்பு குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபை எடுத்திருந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாநகர சபை ஆணையாளருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னரே தற்காலிகமாக இடைநிறுத்த, முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.