பிரதமர் மோடி ரணில் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடி ரணில் சந்திப்பு

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இருநாட்டு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேசுகின்றனர்.

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள நிலையில், இந்தியா ஒத்துழைப்புடன் இலங்கையில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது, சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.

இதுகுறித்து இரு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசுகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ரணில் வருகிற சனிக்கிழமையன்று இலங்கை திரும்புகிறார்.

.

மூலக்கதை