கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., வர்த்தகம்; அக் ஷய திரிதியை நாளில் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., வர்த்தகம்; அக் ஷய திரிதியை நாளில் நீட்டிப்பு

புதுடில்லி : பி.எஸ்.இ., எனப்­படும், மும்பை பங்­குச் சந்தை வெளி­யிட்­டுள்ள அறிக்கை: வரும், 28ம் தேதி, அக் ஷய திரு­தியை தினத்­தன்று, கோல்டு இ.டி.எப்., – எஸ்.ஜி.பி., ஆகி­யவை மீதான வர்த்­தக நேரம் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.அன்று, வழக்­கம் போல, பங்கு வர்த்­த­கம், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடி­வ­டை­யும். அக் ஷய திரு­தியை முன்­னிட்டு, கோல்டு இ.டி.எப்., மற்­றும் எஸ்.ஜி.பி., ஆகி­ய­வற்­றின் மீதான வர்த்­த­கம், மீண்­டும் மாலை, 4:30 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை நடை­பெ­றும்.
இதன்­படி, ஆக்­சிஸ் எம்.எப்., – எச்.டி.எப்.சி., எம்.எப்., – ஐ.டி.பி.ஐ., எம்.எப்., – ரிலை­யன்ஸ் எம்.எப்., – குவாண்­டம் ரெலி­கேர் எம்.எப்., – கோடக் எம்.எப்., மற்­றும் பிர்லா சன்­லைப் எம்.எப்., நிறு­வ­னங்­களின் கோல்டு இ.டி.எப்., திட்­டங்­களில், வர்த்­த­கம் நடை­பெ­றும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள், கோல்டு இ.டி.எப்., திட்­டங்­களை நிர்­வ­கிக்­கின்றன. இதில், தங்­கத்தை யூனிட்­க­ளாக வாங்­க­லாம்.அது போல, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள, எஸ்.ஜி.பி., எனப்­படும், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­க­ளி­லும் முத­லீடு செய்­ய­லாம்.

மூலக்கதை