ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: 3-வது நாளாக டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் முன் ஆஜர்

PARIS TAMIL  PARIS TAMIL
ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: 3வது நாளாக டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் முன் ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் கடந்த 17–ந் தேதி சுகேஷ் சந்திரசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்ட தகவல் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி போலீசார் சென்னை வந்து அவரிடம் சம்மனை நேரில் வழங்கினார்கள்.

அதை ஏற்று நேற்றுமுன்தினம் டெல்லி சென்ற டி.டி.வி.தினகரன் சாணக்கியபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக போலீசார் முன்பு ஆஜரானார்.  இதேபோல் டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனிடமும், நண்பர் மல்லிகார்ஜூனா என்பவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று டிடிவி தினகரன் உள்ளிட்ட மூவரும் விசாரணைக்கு ஆஜராகினர். டிடிவி தினகரனிடம் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, இன்று 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதன்படி இன்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் டிடிவி தினகரன் விசாரணைக்காக  ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை