சிறுவனை கொன்று உடல் பாகங்களை சாப்பிட்ட உறவினர்: காரணம் என்ன?

PARIS TAMIL  PARIS TAMIL
சிறுவனை கொன்று உடல் பாகங்களை சாப்பிட்ட உறவினர்: காரணம் என்ன?

 தென் ஆப்பிரிக்காவில் 4 வயது சிறுவனை கொன்று அவன் உடல் உறுப்புகளை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் உள்ள KwaNtsila கிராமத்தில் வசித்து வருபவர் Mandisi Gwanya (30).
 
பில்லி, சூனியம் போன்ற இயற்கைக்கு எதிரான விடயங்களை செய்வது இவரின் வழக்கமாகும்.
 
இவர் வீட்டின் அருகில் Kamvelihle Ngalathe (4) என்னும் சிறுவன் வசித்து வந்தான். Mandisi, சிறுவன் Kamvelihleக்கு மாமா உறவு முறையாகும்.
 
சம்பவத்தன்று Kamvelihle தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். பின்னர் திடீரென அவன் அங்கிருந்து காணாமல் போயுள்ளான்.
 
இதையடுத்து சிறுவனின் பாட்டி Nontuthuezelo அவனை இரவு முழுவதும் அந்த பகுதியில் தேடியுள்ளார்.
 
ஆனாலும் அவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இரவு இரண்டு மணிக்கு சந்தேகத்தின் பேரின் Mandisi வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
 
அப்போது, அவர் வீடு முழுக்க ரத்தம் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
மேலும், தன் பேரனின் ஒரு கை தனியாக இருப்பதையும், அவன் உடல் பாகங்கள் சிதறி இருப்பதையும் கண்டு இதை ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.
 
பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கபட Mandisiஐ அவர்கள் கைது செய்தனர்.
 
பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், சிறுவன் Kamvelihleஐ கொன்று அவனின் மூளை, இதயம் போன்ற உடல் பாகங்களை தான் சாப்பிட்டதாக Mandisi கூறியுள்ளார்.
 
மேலும், இரத்தத்தையும் அவர் குடித்துள்ளது தெரியவந்துள்ளது.
 
ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து சமீபத்தில் வெளியில் வந்த Mandisi மீண்டும் இது போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
 

மூலக்கதை