இந்தியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.6.5 கோடி பரிசு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.6.5 கோடி பரிசு

வாஷிங்டன்- அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 6. 5 கோடி பரிசு என அமெரிக்க காவல்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள அருண் டேல் மில்ஸ் போல்வார்ட் பகதியில் பிரபல ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பத்ரேஷ்குமார் சேத்தன் பாய் படேல் (26).

இவரது மனைவி பாலக். கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி ஓட்டல் சமையல் அறையில் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

கடந்த 2 ஆண்டுகளாக அவரை அமெரிக்க போலீசார் தேடி வருகின்றனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க காவல்துறை அறிவித்துள்ளது.

அவரை பற்றிய துப்பு கொடுத்தால் ரூ. 6. 5 கோடி பரிசு என்று அறிவித்துள்ளது.

.

மூலக்கதை