முன்னாள் மனைவி மீது விரக்தி பள்ளியில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட ஆசாமி: அமெரிக்காவில் மாணவி உள்பட 3 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் மனைவி மீது விரக்தி பள்ளியில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட ஆசாமி: அமெரிக்காவில் மாணவி உள்பட 3 பேர் பலி

கலிபோர்னியா- அமெரிக்காவில் முன்னாள் மனைவி மீதான விரக்தி காரணமாக பள்ளியில் புகுந்து ஆசாமி ஒருவன் சுட்டதில் 3 பேர் பலியாயினர்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தைச் சேர்ந்தவர் செட்ரிக் ஆண்டர்சன் (53). இவருக்கும் இவரை பிரிந்து சென்ற மனைவி கரேன் எலைன் ஸ்மித்துக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது.

இதனால் ஆண்டர்சன் விரக்தியில் இருந்துள்ளார். இந்த சூழலில் கரேன் எலைன் ஆசிரியையாக பணிபுரியும் சன் பெர்னார்டினோ ஆரம்ப பள்ளிக்குள் இன்று காலை ஆண்டர்சன் புகுந்துள்ளார்.

கரேன் எலைன் பணியாற்றும் வகுப்பறைக்குள் நுழைந்து பள்ளி குழந்தைகள் இருப்பதை கூட மறந்து விட்டு கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கரேன் எலைன் மற்றும் 8வயது மாணவி ஜோனாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் ஆண்டர்சனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு மாணவர்களும், சக ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து அலறி ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை