இரவில் வீட்டுக்குள் நுழைந்த வகுப்பாசிரியருக்கு தர்மஅடி

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
இரவில் வீட்டுக்குள் நுழைந்த வகுப்பாசிரியருக்கு தர்மஅடி

தன் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவனின் வீடொன்றுக்குள் இரவோடு இரவாக, மிகவும் இரகசியமாக நுழைந்த ஆசிரியர் ஒருவரை, கையும் மெய்யுமாக பிடித்த பிரதேசவாசிகள், அவருக்குத் தர்ம அடிகொடுத்துள்ளனர்.  

இந்த சம்பவம், இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குள்ளிலுள்ள கிராமம் ஒன்றிலே கடந்த 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

மாணவனின், தந்தை இரவு நேர கடமைக்குச் சென்றதன் பின்னர், அம்மாணவன் பயிலும் வகுப்பைச் சேர்ந்த வகுப்பாசிரியர், மாணவனின் வீட்டுக்கு, இரவோடுஇரவாக களவாக சென்றுவருவதாக தகவல் கசிந்துள்ளது.  

தந்தை இரவு கடமைக்கு சென்றதன் பின்னர், அந்த வீட்டில், மகனும் அவருடைய தாய் மட்டுமே இருப்பர். அன்றைய தினமும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது. கிராமவாசிகள் விளிப்பாக இருந்துள்ளனர்.  

எனினும், அந்த ஆசிரியர் குறிப்பிட்ட வீட்டுக்குள் களவாக சென்றுள்ளார். அதனைக் கண்ட கிராமவாசிகள், வெளியில் கதவுக்கு பூட்டுப்போட்டுவிட்டு, பிள்ளையின் தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.  

தந்தை வந்ததன்பின்னர், பொலிஸாருடன் வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கு ஆசிரியர் இருந்துள்ளார். அவருக்கு தர்ம அடிகொடுத்த பிரதேசவாசிகள் அவரைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

32 வயதான அந்த ஆசிரியர், ஒரு பிள்ளையின் தந்தையென தெரிவித்த இங்கிரிய பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மூலக்கதை