எம்ஜிஆர் 100.. விழா எடுக்கிறது மதிமுக… நினைவிடத்தில் மலர் தூவி வைகோ மரியாதை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்ஜிஆர் 100.. விழா எடுக்கிறது மதிமுக… நினைவிடத்தில் மலர் தூவி வைகோ மரியாதை

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான, எம்ஜிஆருக்கு ஜனவரி 17ம் தேதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்கியது. எம்ஜிஆர் நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

மேலும், அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து எம்ஜிஆருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு அவர் மலர்தூவி மரியாதை செய்விட்டு புறப்பட்டார்.

மூலக்கதை