அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஆர்கே நகர் இடைத்தேர்தலை ஒட்டி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

108 அம்சங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் வெளியிட்டார்.

அதில், நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும், தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும், எழில்நகர் பகுதியில் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும், ஆர்கே நகர் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும், பட்டா இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக பட்டா தரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில், நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

இதன்போது, ஆர்கே நகர் வேட்பாளர் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, நேற்று வெளியிடப்பட்ட சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கையை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை