தீவிரவாதிகளுடன் நடைபெறும் துப்பாக்கிச்சண்டை பகுதிக்கு இளைஞர்கள் வரவேண்டாம்: ஜம்மு காஷ்மீர் டிஜிபி

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளுடன் நடைபெறும் துப்பாக்கிச்சண்டை பகுதிக்கு இளைஞர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி. வைட் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கி குண்டுகளுக்கு யார் வருகிறார்கள், யாரை சுட வேண்டும் என பார்க்க தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சண்டை பகுதிக்கு இளைஞர்கள்  வருவது திட்டமிட்ட தற்கொலைக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை