திருச்சியிலும் விவசாயிகள் போராட்டம்... கலெக்டரின் குறைதீர்ப்பு கூட்டம் புறக்கணிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருச்சியிலும் விவசாயிகள் போராட்டம்... கலெக்டரின் குறைதீர்ப்பு கூட்டம் புறக்கணிப்பு!

சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக தஞ்சை உட்பட தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை