‘யாழுக்கு ஒன்று கூடியது பதுளைக்கு குறைந்தது’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘யாழுக்கு ஒன்று கூடியது பதுளைக்கு குறைந்தது’

“அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களில் ஒன்று குறைந்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான ஆசனங்களில் ஒன்று கூடியுள்ளது” என, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.  

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம், பதுளை மாவட்டத்துக்கு, அடுத்தத் தேர்தலின் போது எட்டு உறுப்பினர்களும், யாழ்

மாவட்டத்துக்கு ஏழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  

இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று (29) வெளியானது.  

பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை ஒன்பதாகும் என்பதுடன், யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை ஆறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், வேறு எந்த மாவட்டங்களிலும் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை