அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்தியர் பலி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்தியர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிவேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் இந்தியர் ஒருவர் பலியானார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கொலம்பஸ் நகரில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த அன்சுல் சர்மா(30), அவரது மனைவி சமிரா பரத்வாஜ்(28) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அன்சுல் மிஸ்ரா பலியானார். சமிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டிச்சென்ற மிக்கேல் டேமியோவை போலீசார் கைது செய்தனர். அன்சுல் உடலை இந்தியா கொண்டு வர அவரது உறவினர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

மூலக்கதை