அதிதி மேனனை அழ வைத்த நடிகை!

தினமலர்  தினமலர்
அதிதி மேனனை அழ வைத்த நடிகை!

‛பட்டதாரி' படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி மேனன். தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா நடித்து வரும் சந்தனத்தேவன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்தில் மதுரைப்பொண்ணாகவே முழுமையாக மாறி நடித்து வருவதாக சொல்லும் அதிதிமேனனை சமீபத்தில் மலையாள நடிகை பார்வதி மேனன் அழ வைத்து விட்டாராம்.

அதுபற்றி அதிதிமேனன் கூறும்போது, பார்வதி, பகத்பாசில், குஞ்சாகோபோபன் ஆகியோர் நடிப்பில் மார்ச் 24-ந்தேதி மலையாளத்தில் வெளியான படம் டேக் ஆப். இந்த படத்தை கேரளாவிலுள்ள ஒரு தியேட்டரில் என் குடும்பத்தினருடன் சென்று பார்த்தேன். ஒவ்வொரு சீனிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி மேனன். அவர் இல்லாத சீனே இல்லை. க்ளைமாக்சில் அவரது நடிப்பைப்பார்த்து அழுது விட்டேன். நான் மட்டுமின்றி என்னுடன் வந்திருந்த எனது அம்மா, தங்கையும்கூட அழுது விட்டார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் பார்வதிமேனன்.

படம்பார்த்து விட்டு வந்த பிறகும் அந்த கேரக்டர் மனதில் நின்று அழுத்தம் கொடுக்கிறது. அந்த படத்தை பார்த்த பிறகு சினிமாவில் நடித்தால் இந்த மாதிரியான வேடங்களில் நடிக்க வேண்டும். நாலு பாட்டு, நாலு சீனில் வந்து நடித்து விட்டு செல்லக்கூடாது என்று நினைக்கிறேன். தற்போது சந்தனத்தேவனில் எனக்கு அழுத்தமான வேடம் தான் கொடுத்துள்ளார் அமீர். டயம் கொடுத்து நடிக்க வைக்கிறார். அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வரும் வரை அவரும் விடுவதில்லை. நானும் அவர் சொல்வதை முழுமையாக உள்வாங்கி நடித்து வருகிறேன். இந்த படம் வெளியாகும்போது பர்பாமென்ஸ் நடிகை என்கிற முத்திரை என் மீது விழும் என்று கூறும் அதிதிமேனன், அடுத்தபடியாக பர்பாமென்ஸ்க்கு முக்கியத்து வமுள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார்.

மூலக்கதை