மகேஷ்பாபு ரசிகர்களை ஏமாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்!

தினமலர்  தினமலர்
மகேஷ்பாபு ரசிகர்களை ஏமாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்!

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. தமிழ்-தெலுங்கு மொழிகளில் தயாராகி வருவதால், இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ராகுல்பிரீத் சிங் நடிக்க, பரத், நதியா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

மேலும், இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் டைட்டிலை இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதோடு, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிக்குமான தலைப்புகள் ஏப்ரல் 10-ந்தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ள முருகதாஸ், நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார் என்று மகேஷ்பாபு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அப்படம் குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மூலக்கதை