விஜய் டிவியில் அன்புடன் டிடி - முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் டிவியில் அன்புடன் டிடி  முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

சென்னை: விஜய் டிவியில் ஏப்ரல் 1 முதல் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினிதான் இதன் தொகுப்பாளர்.

அன்புடன் டிடியின் முதல் சிறப்பு விருந்தினர் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று வெற்றி பெற்றுள்ள விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் சிவகார்த்திக்கேயன் பங்கேற்றுள்ளார். தற்போது மிகப்பெரிய வெற்றி ஹீரோவாக உயர்ந்த பின்னர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் நட்சத்திரங்களை பேட்டி எடுத்து அவர்களின் மற்றொரு பக்கத்தை ரசிகர்களுக்கு தெரியவைத்தார் திவ்யதர்சினி. பிரபலமாக இருந்த அந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தபட்டது.

காபி வித் டிடிக்கு சின்ன பிரேக் விட்டிருப்பதாக கூறிய டிடி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான அச்சம் தவிர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

 

 

தனுஷின் பவர் பாண்டி திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். பவர் பாண்டி முடிவடைந்து விட்டது. சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்றாலும் விளம்பரங்களிலும் அதிகம் நடித்து வருகிறார் டிடி.

 

 

காபி வித் டிடி நிகழ்ச்சியை போன்று, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ‘அன்புடன் டிடி' என்ற பெயரில் புதிய வடிவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் டிடி.

I'm not very good in selfies..but felt lik taking one in @vijaytelevision's new show #AnbudanDD wit our fav @DhivyaDharshini

மூலக்கதை