'சஹாயக்' நடைமுறை ரத்து: கிரண் ரிஜிஜு
புதுடில்லி : ''துணை ராணுவப் படையில் இனி, 'சஹாயக்' நடைமுறை பின்பற்றப்படாது,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு:
இதுகுறித்து, ராஜ்யசாபாவில் அமைச்சர் ரிஜிஜு பேசியதாவது: துணை ராணுவப் படை அதிகாரிகளுடன் பல்வேறு பணிகளில் இணைந்து பணியாற்றுவதற்காக நியமிக்கப்படும், 'சஹாயக்' எனப்படும் உதவியாளர்கள், அதிகாரிகளின் வேலைக்காரர்கள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ரத்து:
எனவே, துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்.,பில் மட்டுமின்றி, ராணுவத்திலும் இனி, சஹாயக் நடைமுறை பின்பற்றப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.