சென்னையில் ஏப்.2ம் தேதி ரஜினியை சந்திக்க 7 ஆயிரம் ரசிகர்கள் திரள்கிறார்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் ஏப்.2ம் தேதி ரஜினியை சந்திக்க 7 ஆயிரம் ரசிகர்கள் திரள்கிறார்கள்

சென்னை- ரஜினியை சந்திக்க தமிழகம் முழுவதுமிருந்து 7 ஆயிரம் ரசிகர்கள் சென்னையில் திரள்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பகாலங்களில் தினமும் ரசிகர்களை தனது இல்லத்தில் சந்தித்து வந்தார். பாட்ஷா படத்தின்போது அவரது பேச்சு அரசியலில் புயலை கிளப்பியது.

அப்போது நூற்றுக்கணக்கில் அவரை ரசிகர்கள் போயஸ்கார்டன் வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பிறகு அப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினத்தன்று ஊரில் இருக்கும்போது ரசிகர்கள் வந்தால் அவர்களை மட்டும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தார். நீண்ட காலமாகவே ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்று எல்லா மாவட்டத்திலும் உள்ள அவரது ரசிகர்கள் தங்களது மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்து வந்தனர்.



அதுபற்றி ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. சரியான நேரம்வரும்போது சந்திப்பதாக தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை ரஜினி நேரில் சந்திக்க உள்ளார். இதுகுறித்து மன்ற நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுபற்றி மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்தபோது,’ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 250 பேர் வீதம் சுமார் 7 ஆயிரம் ரசிகர்கள் ரஜினியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளனர். ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து 16ம் தேதிக்குள் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது.

மற்றபடி ரஜினி எதுவும் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை’ என்றனர்.

.

மூலக்கதை