ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்குவார் : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்குவார் : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சிக்குவார் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார். ஆர். கே. நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் பேசும்போது, ‘’ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ஒரே அணியாக இருந்த சசிகலா மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள்’’ என்றார்.

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்பது தொடர்பான முடிவுக்கு எதிராக  பல அமைச்சர்கள் மாறுபட்ட நிலையை எடுத்தனர்.



கட்சியில் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர்களைச் சமாதானம் செய்தேன். ஆனால், சசிகலா முதல்வராக பதவியேற்பதும் அதே குடும்பத்திற்கு அனைத்தும் செல்வதும் ஜனநாயகமாகாது என்று நான் கருதினேன்.

என்னை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு முன்பே பல அமைச்சர்களை கூப்பிட்டு பேட்டியளிக்க  சொன்னார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் ஓ. பன்னீர்செல்வம் சிக்குவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அரசின் நிர்வாகம் எனது கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்குத்தான் தெரியும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதில் டீம் லீடர் விஜயபாஸ்கர்தான் சிக்குவார்.


இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

.

மூலக்கதை