தோனியின் ஆதார் விபரம் லீக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தோனியின் ஆதார் விபரம் லீக்

ராஞ்சி- ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசிப்பவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் ஆதார் அடையாள அட்டை பெற விண்ணப்பித்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தோனி, அவரது குடும்பத்தினர்களின் விபரங்களை தனியார் நிறுவனம் ஒன்று பதிவு செய்தது.

பின்னர் இந்நிகழ்வை பெருமையுடன் தெரிவிக்கும் நோக்கில் தோனியின் சுயவிபரம் அடங்கிய விண்ணப்பம் விபரம் மற்றும் அவர் கைரேகையை பதிவு செய்வது போன்ற புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின.

இதுகுறித்து, தோனியின் மனைவி ஷாக்‌ஷி, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் தெரிவித்தார். மேலும், தனிநபர் விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை வெளியிடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘தனிமனித விபரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம்.

இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

.

மூலக்கதை