துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
பாலித ஆரியவன்ச
நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது மட்டுமல்லாது, அந்நபரின் மனைவியை ஆயுதத்தால் தாக்கில் கொன்றுவிடுவதாக அச்சுறுத்திய ஒருவரை, பண்டாரவளை பொலிஸார், இன்றுக் காலை கைதுசெய்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளான ஹப்புத்தளை சொரணாகத பிரதேசத்தைச் சேர்ந்த நபர், பொலிஸ் பாதுகாப்பில், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக, பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் மனைவி, தனது குடும்பத்தாருடன் சென்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்தனர்.
குறித்த நபர், ஹப்புத்தளையிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பண்டாரவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.