தமிழக மீனவர்கள் சுடப்பட்டது தொடர்பாக மாநில அரசு தான் பதில் கூற வேண்டும் : கப்பற்படை தளபதி
அரக்கோணம் : கடந்த 4 ஆண்டுகளில் சீன நீர்முழ்கி கப்பல்கள் இந்தியாவை 6 முறை உளவு பார்த்ததாக அரக்கோணத்தில் கப்பற்படை தளபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்நிய நாட்டு கப்பல்கள் வருவதை தீவிரமாக கண்காணிப்பதாகவும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாநில அரசை தான் கேட்க வேண்டும் எனவும் கப்பற்படை தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் கட்டப்பட்டதாகவும் கப்பற்படை தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார் கூறினார்.