ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் தோற்க வேண்டும்: ஜான்பாண்டியன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் தோற்க வேண்டும்: ஜான்பாண்டியன் பேட்டி

நெல்லை- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் தோற்க வேண்டும் என  நெல்லையில் தமமுக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார். இது தொடர்பாக நெல்லையில் தமமுக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு தற்போது குழப்பமான சூழலில் உள்ளது.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம். ஆர். கே. நகர் தொகுதியில் பணநாயகம் தோற்க வேண்டும்.

ஜனநாயகம் வெல்ல வேண்டும். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

தமிழக வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடி மட்டுமே அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடுகளை கண்டிக்கிறோம்.

அதிமுக எம். பி. க்கள் மத்திய அரசை அண்டி பிழைக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் தாதுமணல் ஆலைகளை மூடிய பின்பு வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை தரவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

தமிழக அரசியலில் நிலவும் குழப்பம் காரணமாகவே ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் ஜாதிய படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்ததற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை