வாடிவாசலை திறக்க போராடியது போல நெடுவாசலை மூடவும் போராட வேண்டும் : மாணவர்கள் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்

சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சாடினர். வாடிவாசலை திறக்க போராடிய நாம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடவும் போராட்டம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.

மூலக்கதை