‘இனவாதத்துக்கு துணை போகிறார் மைத்திரி’
முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது, வில்பத்து தொடர்பிலான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளமையானது, தெற்கின் இனவாதிகளுக்கு தலைசாய்த்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்தார்.
வில்பத்து தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி, இனவாதிகளுக்கு சார்பாக ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டிருக்கிறார். எனவே, அவர் அதனை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீள்குடியமர்த்தாமையினாலேயே இவ்வாறான பிரச்சினை தோன்றியிருப்பதாக மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.