உத்திர பிரதேசத்தில் பணி நேரத்தில் பீர் அருந்திய மூன்று போலீசார் இடைநீக்கம்
எட்டவா: உத்திர பிரதேச மாநிலம் எட்டவா என்ற இடத்தில் மூன்று போலீசார் பணி நேரத்தில் காவல்துறை வாகனத்தில் பீர் அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரி மூன்று போலீசாரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.