பரீட்சையில் சித்தியடையாத இரு மாணவர்கள் தற்கொலை

TAMIL CNN  TAMIL CNN
பரீட்சையில் சித்தியடையாத இரு மாணவர்கள் தற்கொலை

இம்முறை வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இருவர் வெவ்வேறு பிரதேசங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   கணித பாடத்தில் சித்தியடையாத மாணவனொருவன் ராகம பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதேவேளை, ஹோமாகம பகுதியில் மாணவியொருவர் பரீட்சையில் சித்தியடையாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post பரீட்சையில் சித்தியடையாத இரு மாணவர்கள் தற்கொலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை