‘30 வருட பிணைகளை வெளியிட அர்ஜுனவே தீர்மானித்தார்’
30 வருட பிணைகளை வெளியிட மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானிக்கவில்லையெனவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநராகவிருந்த அர்ஜுன மகேந்திரனே தீர்மானித்து, அதற்கான பணிப்புரையை விடுத்தார் என, பிரதி ஆளுநர் பி.சமரசிறி தெரிவித்தார்.
பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சந்தியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் தான் கோபம் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏன் கோபமடைந்தீர்கள் என நீதியரசர் பிரசன்ன ஜயவர்த்தன கேட்ட போது, இது பற்றித் தனக்கு அறிவிக்கவில்லை எனவும் வேறு இரண்டு பிரதி ஆளுநர்களுக்கு மட்டுமே இது தெரிவிக்கப்பட்டதென்றும், அதனால் தான் கோபமுற்றதாகவும் சமரசிறி தெரிவித்தார்.