தமிழகத்தில் எல்.இ.டி தெரு விளக்குகள் அமைக்கும் டெண்டருக்கு இடைக்காலத்தடை

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்தில் எல்.இ.டி தெரு விளக்குகள் அமைக்கும் டெண்டர் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் நிதியுதவியுடன்  ரூ329 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்க திட்டம் செயல்படுத்த இருந்தது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட டெண்டர் நிபந்தனைகளை எதிர்த்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகுதியான ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளிகள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த நிபந்தனைகள் செயல்பட இருந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை