17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்வு

தினமலர்  தினமலர்
17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.64.95-ஆக வர்த்தகமானது. வங்கிகள் மற்றும் ஏற்றமதியாளர்கள் அதிகளவில் டாலரை விற்பனை செய்து வருவது, பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த ரூபாயின் மதிப்பு ரூ.68-லிருந்து, தற்போது ரூ.65-அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை