ஒரே நாளில் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற உள்நாட்டு, வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரே நாளில் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற உள்நாட்டு, வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு

 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஒரு நாள் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 
இந்த பரீட்சை பெறுபேறுகள் குறித்த சான்றிதழ்களை இன்று முதல் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
ஒரு நாள் சேவையின் ஊடாக இன்று முதல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.என்.எம்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
 
கடந்த காலங்களில் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டது.
 
எனினும் இம்முறை இவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 
ஒரு நாள் சேவை ஊடாக உடனடியாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
 
மேலும், பரீட்சை திணைக்கள பரீட்சை பெறுபேற்றுப் பிரிவில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை