விமான நிலையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து, மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜூ நேற்று கூறியதாவது: நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள விமான நிலையங்களை தீவிரவாதிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளதை மத்திய அரசு அறிந்துள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களையும் சிஐஎஸ்எப் பாதுகாப்பில் ஒப்படைப்பது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ளதுபோல் போக்குவரத்து பாதுகாப்புக்கு தனிப்பிரிவு தேவை. ரயில்வே பாதுகாப்புக்கு பணிகளை ஆர்பிஎப் மேற்கொள்வதுபோல், விமான நிலைய பாதுகாப்பு பணிகளை சிஐஎஸ்எப் மட்டும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகளில் சிஐஎஸ்எப் ஈடுபட்டுள்ளது. தற்போது சிஐஎஸ்எப் விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், நினைவிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.