எம்பி, எம்எல்ஏ வீடுகளில் 73 திருட்டு சம்பவங்கள்

தினகரன்  தினகரன்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், “டெல்லி போலீசார் அளித்த அறிக்கையின் படி கடந்த 2014ம்  ஆண்டு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளில் திருட்டு தொடர்பாக 25 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 9 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 2015ம் ஆண்டு 29 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  2016ம் ஆண்டு 19 திருட்டு வழக்குகளும், குற்றம் தொடர்பாக 5 பேரும் கைது செய்யபட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை எம்பி, எம்எல்ஏ  வீடுகளில் திருட்டு தொடர்பாக 2 வழக்குகள் பதிவாகி உள்ளன” என்றார்.

மூலக்கதை