கேரள முதல்வர் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது

தினகரன்  தினகரன்

உஜ்ஜைன்: கேரள முதல்வர் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு தருவேன் என அறிவித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி நேற்று கைது  செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்தவர் குன்டன் சந்திரவாட். ஆர்எஸ்எஸ் பிரமுகரான இவர், இம்மாத  தொடக்கத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆர்எஸ்எஸ்சும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சந்திர  வாட் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.இதையடுத்து உஜ்ஜைன் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பர பிரிவு தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்த  நிலையில் கேரள மாநில முதல்வர் தலைக்கு பரிசு அறிவித்த சந்திரவாட் மீது உஜ்ஜைன் அருகேயுள்ள மாதவ் நகர் போலீசார் வழக்குப் பதிவு  செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சந்திரவாட் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை