பெயின்ட் தயா­ரிப்­பில் களமிறங்கும் ஜிண்­டால் நிறுவனம்

தினமலர்  தினமலர்
பெயின்ட் தயா­ரிப்­பில் களமிறங்கும் ஜிண்­டால் நிறுவனம்

மும்பை : ஜிண்டால் நிறுவனம், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், பெயின்ட் விற்பனையிலும் களமிறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி பார்த் ஜிண்டால் கூறியதாவது: ஆண்டுதோறும், பெயின்ட் துறை, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. சர்வதேச அளவில், பெயின்ட் உற்பத்தி, விற்பனையில், ஆசிய நாடுகளின் பங்கு அதிகம் உள்ளது. நிறுவனத்தின் சிமென்ட், உருக்கு விற்பனை மூலம், அதிக முகவர்கள் உள்ளனர். எனவே, நிறுவனம், 2018 ஏப்., முதல், பெயின்ட் தொழிலிலும் ஈடுபட உள்ளது.
இதற்காக, கர்நாடகாவில் உள்ள விஜய்நகர்; மஹாராஷ்டிராவில் உள்ள வசின்ட் ஆகிய இடங்களில், தலா, ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான மொத்த முதலீடான, 1,000 கோடி ரூபாயும், ஜிண்டால் குழுமத்தினுடையதாக இருக்கும். இந்த நிதி, கடன் மற்றும் பங்குச் சந்தையின் மூலம் திரட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை