ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
புதுடில்லி : பொது காப்பீட்டு துறையில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
மத்திய அரசு, வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தான் கொண்டுள்ள பங்குகளில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. அதில், பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.அதன்படி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியன்டல், யுனைடெட், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள, எட்டு நிறுவனங்களை நியமித்துள்ளது.