கட்சி செயலாளர்களுடன் மஹிந்த இன்று பேச்சு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
கட்சி செயலாளர்களுடன் மஹிந்த இன்று பேச்சு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (29) முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவிருக்கின்றது.   

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், பதவிக்காலம் நிறைவடையவிருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்று தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  

அதேபோல, வாக்காளர் இடாப்புச் சீர்திருத்தம்,  தேர்தல்கள் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, இந்தச் சந்திப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்கள் மற்றும்; அதிகாரிகளும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.  

மூலக்கதை