‘கச்சதீவை மீட்பேன்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘கச்சதீவை மீட்பேன்’

மீனவ சமுதாயத்துக்காக கச்சதீவை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராடுவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார்.   

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இந்த தேர்தல் அறிக்கையானது, எம்.ஜி.ஆர்.-அம்மா -தீபா பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார்.  
அவர் மறைவுக்குப் பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா,  கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றி பேசும்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சதீவை மீட்க வேண்டும் என்று போராடினார்.  

அவரது இரத்த வாரிசான நான் (ஜெ.தீபா),  அவரது வழியில் மீனவ சமுதாயத்துக்காக கச்சதீவை மீட்கப் போராடுவேன்.  
இதேவேளை, ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்தி சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மூலக்கதை