பனிச்சரிவால் சிக்கி தவித்த 71 சுற்றுலா பயணிகள் மீட்பு

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள சங்க்லா கணவாய் மற்றும் டாங்ஸ்டி கிராமம் இடையே பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் 21 பெண்கள் உட்பட 71 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். இதுதொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை