மதச் சார்பின்மையும் கட்டாயக் கல்வியும் - வரலாற்றுப் பார்வை!!
இன்றைய தினமானது, பாடசாலைகள் மதச்சார்பின்மையையும் (laïque), கட்டாயக் கல்வியையும் தனதாக்கிக் கொண்ட தினமாகும். இதே ஏப்ரல் 28ம் திகதி 1882ஆம் ஆண்டு, சிறுவர்களிற்குப் பாடசாலைகள் கட்டாயமாக்கப்பட்டன. இந்தச் சட்டமானது இயற்றப்படும்போது, கிட்டத்தட்ட ஆறு இலட்சம் சிறுவர்கள் கல்வியறிவற்றவர்களாய், பாடசாலைகள் செல்லாதவர்களாக இருந்தார்கள்.