'சதுரங்க வேட்டை 2' படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி

தினமலர்  தினமலர்
சதுரங்க வேட்டை 2 படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி

வினோத் இயக்கத்தில் நட்ராஜ், இஷாரா நாயர் மற்றும் பலர் நடித்த 'சதுரங்க வேட்டை' படம் 2014ம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தைத் தயாரிப்பது தற்போது பேஷன் ஆக இருப்பதால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க முடிவெடுத்தார்கள்.

2016ம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் பாரதிராஜா ஆரம்பித்து வைத்தார். மனோபாலா தயாரிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மலேசியால் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படமாக்கம் நிறைவுக்கு வந்தது.

“என் சம்பந்தப்பட்ட 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மனோபாலா, நிர்மல், வெங்கி மற்றும் குழுவினருக்கு நன்றிகள். த்ரிஷா, மிக்க நன்றி, உங்களுடன் நடித்தது சிறப்பு வாய்ந்தது,” என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.

மூலக்கதை