கடந்த வாரம் 7 பேரை காணவில்லை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
கடந்த வாரம் 7 பேரை காணவில்லை

ஒரு குழந்தை, 9 வயதுடைய பிள்ளை மற்றும் இளைஞனொருவன் உட்பட 7 பேர், கடந்த வாரம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த 24ஆம், 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில், இவர்கள் காணாமல் போயுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தலப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட காஞ்சனா மஹனாமா (வயது 29) மற்றும் அவரது ஒன்றரை வயதுடைய மகன் ஆகியோர், கடந்த 24ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குட்டிகல பிரசேத்திலிருந்து ஒன்பது வயதுடைய நிம்சரா சந்தீப என்ற பிள்ளையை, கடந்த 25ஆம் திகதியிலிருந்தும் ஹக்மன பிரதேசத்திலிருந்து மதுகே சம்பத் என்ற இளைஞனை, கடந்த 24ஆம் திகதியிலிருந்து காணவில்லையென, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து றுஷானா மெஜினியா (வயது 43) என்பவர் கடந்த 25ஆம் திகதி காணாமல் போன அதேவேளை, நாரஹன்பிட்டியிலிருந்து என். சங்கர் (வயது 36) என்பவரும் காணாமல் போயுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹிக்கடுவ ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும், கடந்த 26ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை