காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் சண்டை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் சண்டை

ஸ்ரீநகர்- காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது இன்று பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பத்கம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை விரைந்து சென்ற வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

வீரர்களை கண்ட தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. 2 தீவிரவாதிகள் வரை பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் பாதுகாப்பு படைவீரர்கள் அவர்களை பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அவந்திபுரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை