ஆக்‌ஷன் நடிகையாக தமிழில் ரீஎன்ட்ரி ஆகும் டாப்ஸி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆக்‌ஷன் நடிகையாக தமிழில் ரீஎன்ட்ரி ஆகும் டாப்ஸி

ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2ம் பாகம் படங்களில் நடித்த டாப்ஸி கடைசியாக வை ராஜா வை படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் இந்தியில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.

பிங்க், தி காஸி அட்டாக் படங்கள் அவருக்கு நல்லபெயரை பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து, நாம் சபனா படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழில் நான்தான் சபனா என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. ஷிவம் நாயர் இயக்குகிறார்.

அக்‌ஷய்குமார், பிருத்விராஜ் நடித்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் தான் நடிக்கும் படம் வரவுள்ளதையடுத்து அப்பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் சென்னை வந்தார் டாப்ஸி.



அப்போது டாப்ஸி கூறியது: தமிழில் எனது கதாபாத்திரங்களை நடுநிலையுடன் நடித்தேன். ஆனால் பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே வந்தது.

நான் அழகாக தெரியவில்லையா? அல்லது நன்றாக நடிக்கவில்லையா? என்று எனக்கு தெரியவில்லை. செல்வராகவன் படத்தில் நடிப்பதாக இருந்தது எதிர்பாராதவிதமாக டிராப் ஆனது.

இந்தியில் நடித்துள்ள நாம் சபனா தமிழில் நான்தான் சபனா என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை.

இந்த கதாபாத்திரத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ், ஹார்மகா, ஜப்பான் குடோ போன்ற கலைகளை ஒரு வருடம் கற்றுக்கொண்டேன். இதனால் ஆக்‌ஷன் காட்சிகளில் துணிச்சலாக நடிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை