ஒரே படத்தோடு ஹாலிவுட்டை மூட்டைகட்டிய ஹீரோயின்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே படத்தோடு ஹாலிவுட்டை மூட்டைகட்டிய ஹீரோயின்

கோலிவுட்டில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பாலிவுட்டில் நடிக்க ஆசை. பாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம்.

கோலிவுட்டிலிருந்து அசின் முதல் லட்சுமிராய் வரை பல நடிகைகள் பாலிவுட்டில் நுழைந்திருக்கின்றனர். ஆனால் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சமீபத்திய ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அமைரா தஸ்தர் என மூவர் மட்டுமே நுழைந்திருக்கின்றனர்.

பேவாட்ச் ஆங்கில படத்தில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ என்ற ஆங்கில டி. வி. சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, ‘டிரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆப் ஸென்டர் கேஜ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார் தீபிகா படுகோன். குங்ஃபூ பாண்டா படத்தில் ஜாக்கி சானுடன் நடித்தார் அமைரா.



ஹாலிவுட் சென்றவர்களில் பிரியங்கா மட்டுமே இன்னமும் ஹாலிவுட் அதிரடியை தாக்குபிடித்துக்கொண்டிருக்கிறார். தீபிகா படுகோன் பெட்டி படுக்கையோடு மூட்டை கட்டிக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டதுடன் ஹாலிவுட் படங்களுக்கு முழுக்குபோடவும் முடிவு செய்திருக்கிறார் என்றுதான் சொல்லப்படுகிறது.

டிரிபிள் எக்ஸ். படத்துக்கு பிறகு தீபிகாவுக்கு மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியில் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர சர்வதேச அளவில் பேசப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கெஸ்ட்டாக பங்கேற்க வந்த அழைப்பையும் தீபிகா ஏற்க மறுத்துவிட்டார்.

.

மூலக்கதை