ஜிஎஸ்டி மசோதா சோனியா கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டி மசோதா சோனியா கேள்வி

புதுடெல்லி- சிகிச்சைக்கு பின் நேற்று மக்களவை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜிஎஸ்டி துணை மசோதாக்களை மத்திய அரசு திடீரென தாக்கல் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி(70) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி வெளிநாடு சென்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 16ம் தேதி வெளிநாடு சென்ற அவரது மகனும் காங். துணை தலைவருமான ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை சோனியாவை இந்தியா அழைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மக்களவைக்கு வந்த சோனியா காந்தி, ‘அலுவல் பட்டியலில் குறிப்பிடாமல் ஜிஎஸ்டி துணை மசோதாக்களை மக்களவையில் திடீரென மத்திய அரசு தாக்கல் செய்தது ஏன்’ என்று கேள்வி எழுப்பினார்.

.

மூலக்கதை