நீர்வீழ்ச்சி குட்டையில் மூழ்கி சென்னை வாலிபர் சாவு
திருப்பதி- சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தினேஷ்(19). திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் உள்ள சக்திகூருமடுகு நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் வந்தார்.
நீர்வீழ்ச்சியில் தினேஷ் உட்பட நண்பர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக அங்குள்ள குட்ைடயில் விழுந்த தினேஷ் தத்தளித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் தினேஷ் நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து நாகலாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷை சடலமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
.